Saturday, July 29, 2017

பிக்பாஸில் காயத்ரியை நல்லவராக காட்டுவதற்கு காரணம் என்ன? வெளியே கசிந்த ரகசியம்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள காயத்ரியின் தாயார் கமலிடம் சென்று சண்டையிட்டதாகவும், அதனால் தான் தற்போது அவர் நல்லவர் போல் காட்டப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த கருத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் மற்றும் ஜல்லிக்கட்டுக்காக போராடிய ஜுலி என மொத்தம் 15 பேரில் லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் ஓவியா, இதனால் தான் அவர் அங்கிருக்கும் பங்கேற்பாளர்களால் வெளியேற்றப்பட்டாலும், ரசிகர்களின் ஆதரவால் தொடர்ந்து வருகிறார்.
ஒவியா இந்த அளவிற்கு ரசிகர்களை பெறுவதற்கு முக்கிய காரணமாக காயத்ரியை கூறலாம். அவருக்கு ஓவியாவுக்கும் எப்போதும் பொருந்தாது. இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடந்துள்ளது.
இதனால் காயத்ரியை மக்கள் கடுமையாக சாடி வருகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் கமலும் காயத்ரி பொய் கூறுகிறார் என்று கூறி சாக்லேட் மில்க் ஷேக் பிரச்சனையை வெளிப்படையாக காட்டினார். இதைக் கண்ட மக்கள் காயத்ரி மீது கடும் வெறுப்பில் இருந்தனர்.
இந்நிலையில் காயத்ரியின் தாயார் கிரிஜா, கமலிடம் சென்று சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் கமலிடம் உங்களை நம்பித்தானே காயத்ரியை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தேன், ஆனால் நீங்கள் வேண்டுமென்றே எங்கள் மகளின் பெயரை கெடுக்கிறீர்கள் என்று கூறியுள்ளாராம்.
இதன் காரணமாகவே தற்போது வரும் எபிசோட்களில் காயத்ரி நல்லவர் போல் காட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS