Wednesday, August 9, 2017

நீங்கள் இப்படித்தான் குளிப்பவரா? இதனால் என்ன விளைவு வருமென்று தெரியுமா?


உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா என்றால் நிச்சயம் அது இல்லை.
சரி பின் எதற்குத்தான் குளிக்கிறோம்?
குளியல் என்றால் குளிர்வித்தல் என்று பொருள்படும், குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.
மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.
ஒருபோதுமே வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த நீரை அப்படியே தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை என்ற ஒழுங்கில் ஊற்றவேண்டும்.
சரி எதற்காக இப்படியெல்லாம் என்ற கேள்வி எழுகின்றதா?
காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும். நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம். குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
குளத்தில் இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா?
உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்களல்லவா?
இது எதற்கு?
உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும். எனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.
பாருங்கள் நமது முன்னோரின் அறிவியலை!!
நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள்
 உண்டு.குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது. பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும். புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.
குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேற... இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷம்புவையும் போட்டு குளிச்சிட்டு வந்தால் நாங்கள் நோயாளியாக இல்லாமல் வேறு எப்படித்தான் இருப்போம்? சொல்லுங்கள் பார்க்கலாம்??
குளிப்பதற்கு மிக உகந்த நேரம் அதிகாலை தான். அதாவது சூரியன் உதயமாவதற்கு முன். இதற்கு மிகச் சிறந்த நீர் என்றால் குளிர்ந்த நீர் தான்.
ஆகவே குளியல் என்பது அழுக்கை நீக்குவதற்கு மட்டும் அல்ல, நமது உடலைக் குளிர்வித்து ஆரோக்கியமாக வாழ்வதற்குத்தான். இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் இனிமேலாவது உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS